மக்களின் பேராதரவு., மீண்டும் பாஜக ஆட்சி.! புதிய முதலமைச்சர் இவர் தான்.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை (திங்கள்கிழமை) நண்பகல் 12 மணிக்கு அசாம் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

அசாம் மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

இதில் கடந்த முறை முதலமைச்சராக இருந்த சர்வானந்த சோனோவால்-க்கும், கடந்த முறை சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

இந்த நிலையில், இன்று பாஜக சட்டப்பேரவை குழு கூட்டம் பேரவை வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டப்பேரவை குழுத் தலைவராக ஹிமந்த விஸ்வ சர்மா பெயரை, முன்னாள் முதல் அமைச்சர் சர்வானந்த சோனோவால் முன்மொழிந்தார்.

அதற்கு எம்எல்ஏக்கள் முழு ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் ஹிமந்த விஸ்வ சர்மா அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக வருவது உறுதியாகி விட்டது. 

இந்நிலையில், மாநிலத்தின் புதிய அமைச்சரவை நாளை நண்பகல் 12 மணிக்கு பதவியேற்க உள்ளதாக பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

assam new cm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->