ஜெயலலிதா சூழ்ச்சியால் கொலை? அறிக்கையின் இறுதிப்பக்க திருக்குறள்! உணர்த்துவது இதுதான்.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016 இல் டிசம்பர் மாதத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதியான ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் 608 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், பல்வேறு தெளிக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, சசிகலா, கே எஸ் சிவகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். 

இந்த 608 பக்க அறிக்கையில் பல மர்மங்கள் முடிச்சவிழ்க்கப்பட்டுள்ளன. கிடைக்கின்ற தகவல் அனைத்தும் ஜெயலலிதா எப்படிப்பட்ட நிலையில் இருந்துள்ளார் என்பதை உணர்த்தும் போது ஒரு முதலமைச்சருக்கே இந்த நிலையா? என்று அச்சம் கொள்ள வைக்க்ன்றது. காரணம் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டதால் உடல் நலம் குன்றி அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவரை காப்பாற்ற நிறைய வாய்ப்புகள் இருந்தும். சூழ்ச்சியின் அடிப்படையில் அவருக்கு மருத்துவம் பார்க்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பட மேலே போய் அந்த அறிக்கையின் இறுதி பக்கம் ஒரு திருக்குறள் இடம்பெற்றுள்ளது மேலும் திகிலடைய வைத்துள்ளது. 

அந்த திருக்குறள்: 

"காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா 
வேலாள் முகத்த களிறு. " என்பதாகும். 
இதன் பொருள் : போரில் அனைவரையும் வீழ்த்தும் யானை சேற்றில் சிக்கிவிட்டால் சிறு நரிகள் கூட அதை கொன்றுவிடும் என்பது தான். 

சிங்கமாக வலம் வந்த ஜெயலலிதா சிறிது உடல்நலிவுற்றதால் சூழ்ச்சி செய்து படிப்படியாக அவரைக் கொன்றுவிட்டார்கள் என்பதை மறைமுகமாய் உணர்த்தியுள்ளது அறிக்கை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arumugasamy Committee statement about Jayalalitha Death last Page thirukkural


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->