#சற்றுமுன் | குட்டுப்பட்ட விசிக - அண்ணாமலை மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Annamalai VCK Case Chennai HC Judgment
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரிய விசிக வழக்கறிஞரின் மனுவை, தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிப்பிடும் வகையில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.
அவரின் அந்த பதிவில் ஒரு சமூகத்தை தாழ்த்தும் வகையில் ஒரு வார்த்தை இருந்தாக கூறி விசிகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அண்ணாமலைக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. இதனையடுத்து, விசிக சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, மனிதரின் மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Annamalai VCK Case Chennai HC Judgment