அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகிறார்.

அண்ணாமலைக்கு புரிதல் கிடையாது. புரிந்துகொள்ளும் பக்குவமும் கிடையாது. பத்திரிக்கையாளர் பக்கத்தையும், தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, செந்தில்பாலாஜி 5 கட்சிக்கு மாறியவர்.  காற்றிலிருந்து, நிலக்கரியிலிருந்து விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவர் செந்தில்பாலாஜி. அண்ணாமலைக்கு பக்குவம் இல்லை என்று சொல்லி உள்ளார். 

அவர் சொன்னது போலவே எனக்கு பக்குவமாக ஊழல் செய்ய தெரியாது. செந்தில்பாலாஜி கருத்தை முற்றிலுமாக ஏற்கிறேன். அண்ணாமலைக்கு பக்குவமாக ஊழல் செய்ய தெரியாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai reply to senthil balaji


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->