பிரதமருக்கு தேர்தல் பயம் இல்லை - பொதுவெளியில் போட்டுடைத்த அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். பிரதமர் அடிக்கடி தமிழகத்திற்கு வருவதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 2026 ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க இந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக பாராளமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் உள்ள கிராமங்கள் உட்பட அனைத்திலும் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். 

பிரதமர் மோடி தமிழகத்திற்கு இத்தனை முறை வருவது எம்பிக்களுக்காக என்று நினைத்தீர்களா? 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்காகதான் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார். 400 எம்பிக்களை பெற்று நாங்கள் ஆட்சி அமைத்தாலும் எங்களின் குறி 2026 தான். பிரதமர் மோடி அதில் தெளிவாக உள்ளார்.

இப்போது கிடைக்கும் எம்பிக்கள் மக்களுக்கு வேலை செய்து காட்ட வேண்டும். மாற்றிக் காட்டவேண்டும் என்று சபதம் எடுத்துள்ளோம். பிரதமருக்கு தேர்தல் பயம் இல்லை. எந்த பிரதமராவது தேர்தல் தேதி அறிவித்த பிறகு வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளாரா? மோடிக்கு பயம் என்று சொல்பவர்களுக்கு அரசியல் தெரியவில்லை" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai press meet about pm modi come tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->