காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த நாடக காதலன் தப்பி ஓட்டம்.! - Seithipunal
Seithipunal


காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த நாடக காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் : நெல்லூர் பகுதியில் தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடிய நாடக காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை, அதே பகுதியை சேர்ந்த சஞ்சு கிருஷ்ணா என்பவன் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும், சஞ்சு கிருஷ்ணா தனது காதலை அந்த பள்ளி மாணவியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு பள்ளி மாணவி தான் படிக்க வேண்டும் என்று கூறி, அவரின் காதலை ஏற்க மறுத்து உள்ளதாக தெரிகிறது. 

இந்த நிலையில், இன்று அந்த பள்ளி மாணவி பள்ளிக்கு செல்லும் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த நாடக காதலன் சஞ்சு கிருஷ்ணா, மாணவியை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

படுகாயமடைந்த பள்ளி மாணவியை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AndhraPradesh SchoolGirl attempt murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->