அமமுகவை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
ammk case for high court
அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி புகழேந்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய 16 பேர் சார்பில் பதிவு விண்ணப்பத்துடன் சேர்ந்த பிரமாண பத்திரத்தை அளித்துள்ளனர். ஆனால் தற்போது கட்சியாக பதிவு செய்ய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த 16 பேரும் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
எனவே அமமுகவை கட்சியாக பதிவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார். புகழேந்தி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு செய்ய தடை கோரிய வழக்கு விசாரணையில், அமமுகவில் இருந்து வெளியேறிய பின் அக்கட்சியை பற்றி கவலைப்படுவதேன்?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.