அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்ட அறிவிப்பு.! காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை இன்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

"கழகப் பொதுச்செயலாளர் பங்கேற்கவிருந்த சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு; கூட்டங்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்!

நாளை (19.07.2022) முதல் தொடங்கி நடைபெறவிருந்த, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கும் கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.

சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அண்மை செய்தி : 

மக்கள் நீதி மய்யம் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய  காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்' காவு வாங்குவதை வேடிக்கை  பார்க்கலாமா?" என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk announce july 18


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->