தினகரனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த அமமுக நிர்வாகிகள்.. கலக்கத்தில் அமமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தல் முடிவுகள் அமமுக-வுக்கு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என அக்கட்சியினர் கூறிவந்த நிலையில், டெபாசிட் இழந்தது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், அதிமுக தொண்டர்கள் 95% பேர் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என்று டிடிவி தினகரன் கூறி வந்தார். இந்த தேர்தல் முடிவால் பேரதிர்ச்சியில் உள்ளனர். இதனால் அமமுக நிர்வாகிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவுக்கு தாவி வருகின்றனர். 

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் சென்னை பசுமை வழி சாலை உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk 100 members join admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->