27 நபர்களை கொடூரமாக சுட்ட இளைஞன்., தனது தங்கையும் அதே தாக்குதலில் பலி கொடுத்தான்!!
america shooting order
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சில நாட்களுக்கு முன் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்றவன், 24 வயதான கான்னர் பெட்ஸ் எனும் வெள்ளையினத்தைச் சேர்ந்த இளைஞன் மேற்கொண்ட அந்த கொடூர தாக்குதலை நடத்தியவன். உயிரிழந்தவர்களில் 6 பேர் கறுப்பினத்தவர்கள் ஆவர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 22 வயது முதல் 57 வயதானவர்கள் வரை இருந்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களிலேயே இளையவர் 22 வயதான மேகன் பெட்ஸ், இவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் சொந்த தங்கை ஆவார். மேகன் உள்பட 4 பெண்கள், 5 ஆண்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர். குண்டடி பட்ட 27 பேரில், 4 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவும், ஒருவரின் நிலை மிகவும் மோசமாகவும் உள்ளது. துப்பாக்கிச் சூடு தொடங்கிய ஒரே நிமிடத்திலேயே தாக்குதல் நடத்தியவனை போலீசார் சுட்டுக் கொன்றதாக ஓஹியோ மாகாணத்தில் மேயர் தெரிவித்துள்ளார்.