முந்திக்கொண்ட ஓபிஎஸ்.! உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தது! இபிஎஸ்?!
AIADMK OPS vs EPS case jan 16
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நடந்து முடிந்துள்ளது.
கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பிலான வாதங்கள் முன்வைக்கப்பட்டுது. அதில் குறிப்பாக, "ஜூன் 23ஆம் தேதி கூடிய பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவை இபிஎஸ் கூட்டவில்லை, பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் நான்கு பங்கு பேர் விருப்பத்தின் அடிப்படையில் தான் கூட்டப்பட்டது.
பொதுக்குழு எடுக்கும் முடிவுகள் அடிப்படை உறுப்பினர்களை கட்டுப்படுத்தும். அதிமுகவில் பொதுக்குழுவுக்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. மேலும் பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபர் மட்டுமே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி எண் 7 கூறுகிறது" என வாதம் வைத்துள்ளது,
இதேபோல் ஓபிஎஸ் தரப்பும் தனது இருந்து வாதத்தை முன்வைத்துள்ளது. அப்போது நீதிபதிகள், "ஜூன் 23ல் கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் சரியானது என நீங்கள் கூறினால்,அதற்கடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு தேதி குறிப்பிட்டதும் சரியானது தானே.?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதிக்குள் (இன்று) எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான தனது இறுதி வாதத்தை முதல் ஆளாக ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியும் தனது தரப்பு இறுதி வாதத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.
English Summary
AIADMK OPS vs EPS case jan 16