விஜய் ‌"நீந்தி கரை சேருவாரா" பார்க்கலாம்..! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை "தமிழக வெற்றி கழகம்" என்ற பெயரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தந்து கட்சிக்காக முறையாக பதிவு செய்துள்ளார். 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் போன்ற மேற்கோள்களுடன் அறிக்கை வெளியிட்டு தனது அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். 

தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் நீண்ட நெருங்கிய தொடர்பு இன்று வரை இருந்து வருகிறது. தமிழகத்தை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர்கள், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் திரை துறையில் இருந்து வந்ததே இதற்கு சான்று.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து‌ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் "அரசியல் என்பது பெருங்கடல், மிகப்பெரிய சமுத்திரம்‌‌. அதில் நீந்தி கரை சேர்ந்தவர்களும் இருப்பார்கள். மூழ்கியும் போவார்கள். விஜய் கரை சேர்வாரா? மூழ்கி போவாரு? என்பதை பார்க்கலாம். அதை மக்களே தீர்மானிப்பார்கள்" என கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK jayakumar said let see Vijay politics


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->