தனயனுக்காக சேலத்தில் ஒரு குடும்ப மாநாடு.!! - அதிமுக ஜெயகுமாரின் பஞ்ச்.!!
aiadmk jayakumar criticized dmk mkstalin udhayanithi
சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி 2வது மாநாடு குறித்து ஆகுமா முன்னாள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் "மாநாட்டில் ஓரிரு குடும்பங்களைத் தவிர, திமுக மூத்த தலைவர்களின் குடும்பங்கள் கூட வரவில்லை. கவர்ச்சி நடனம் நடத்தியும், நிகழ்ச்சிக்கு போதுமான அளவு கூட்டம் சேர்க்க முடியாமல், ஆளும் தரப்பு தடுமாறிப் போனது.
ஆட்சி, அதிகாரம், பணபலம், அரசு இயந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி ஒரு லட்சம் பேரைக்கூட திரட்ட முடியாத படுதோல்வி மாநாடாக திமுக இளைஞர் அணி மாநாடுமுடிந்துள்ளது. அமைச்சர் உதயநிதி, மூத்தவர்களையும், அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் களையும் கேலி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதிமுக பொன்விழா மாநாட்டைப் போல் தன் தனயனுக்காக ஒரு குடும்ப மாநாட்டை சேலத்தில் நடத்தி தங்களைத் தாங்களே மகிழ்வித்துக் கொண்டு உள்ளனர். மொத்தத்தில் பிரமாண்டப்படுத்த போவதாக சொல்லப்பட்ட இந்த மாநாடு அனைத்து விதங்களிலும் தோல்வியில் முடிந்துள்ளது. இது தான் மாநாடு வாயிலாக அக்கட்சிக்குக் கிடைத்த பலன்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சமண் செய்துள்ளார்.
English Summary
aiadmk jayakumar criticized dmk mkstalin udhayanithi