BigBreaking | தனக்கான (அதிமுக) அரசியல் ஆலோசகரை நியமித்த ஓபிஎஸ்! அதிகாரபூர்வ அறிவிப்பு!
ADMK Political Adviser for OPS
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமிக்கு தனித்தனியாக பிரிந்தனர்.
தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை பெற்று, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அதிமுக பொதுக்குழு சிறப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஓபிஎஸ்-யை கட்சியில் இருந்து நீக்கியது.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகளின் உயர்நீதிமன்ற தீர்ப்பில் பொதுக்குழு அங்கரிக்கப்பட்டது. அதன்படி, எடப்பாடி பழனிசாமி பக்கம் கட்சியிருப்பது உறுதியாகியது.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு வரும் 30ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ச. இராமச்சந்திரனை நியமித்து, ஓ பன்னீர்செல்லம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் அந்த அறிவிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன், B.E., (Hons) (கழக அமைப்புச் செயலாளர்) அவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் அதிமுகவின் உறுப்பினர் இல்லை என்று சொல்லிவரும் நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக ஒருவரை ஓபிஎஸ் நியமித்து இருப்பது இபிஎஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
English Summary
ADMK Political Adviser for OPS