அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொறுப்பிலிருந்து நீக்கம்.. காரணம் இதுவா.? உச்சக்கட்ட கோபத்தில் எடப்பாடி.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட கழக செயலாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பதவி வகித்து வரும் கே டி ராஜேந்திர பாலாஜி அப்பதவியிலிருந்து  விடுவிக்கப்படுகிறார் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அறிவித்துள்ளனர். 

ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்டத்திற்கு கழகச் செயலாளராகவும் பால்வளத் துறை அமைச்சராகவும் இருந்து வருபவர் கே டி ராஜேந்திர பாலாஜி. இவர் மீது அண்மைக்காலமாக பாஜக விற்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அதேபோல அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் ஒருவர் தாக்கப்பட்டதில் இவரின் பெயரானது அதிக அளவில் பேசப்பட்டது. 

மேலும் நாங்குநேரி இடைத்தேர்தலில் போது தன்னை சந்திக்க வந்த முஸ்லிம்களை நீங்கள் தான் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீர்களா பிறகு எதற்கு என்னை சந்திக்க வந்தீர்கள் என கேட்டு திருப்பி அனுப்பினார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய மத விவகாரம் குறித்து பேசி இருந்தார். இந்த விவகாரம் அதிமுக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. 

அதன்பிறகு முதலமைச்சர் அவரை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பதற்கு என்பது போல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அன்மையில் செய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டதில் உச்சகட்ட கோபமடைந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் நமக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் நிலையில் இவர் எதற்கு இந்த வேலையில் ஈடுபட்டார் என இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் மதத்தை மையமாக வைத்து ராஜேந்திரபாலாஜி ட்விட்டரில் போட்ட பதிவை ஒரு சில வினாடிகளில் முதலமைச்சர் கவனத்திற்கு சென்றது. ஆகையால்தான் விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk party post rajendra balaji remove reason


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->