#Breaking: அதிமுகவில் அதிரடி மாற்றம்., சற்றுமுன் ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் 2021 சட்டமன்ற தேர்தல் பொது தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமை சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், 

"அதிமுகவின் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்கள், கீழ்க்கண்டவாறு புதிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பின்வருமாறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதை, மாவட்ட கழக செயலாளர்கள் கீழ்காணும் மாவட்டங்களுக்கு இன்று முதல் நியமிக்கப் படுகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

(வடசென்னை தெற்கு (கிழக்கு) பகுதிக்கு, அமைச்சர் ஜெயக்குமார் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடசென்னை தெற்கு (மேற்கு) பகுதிக்கு, எம்.எல்.ஏ., பாலகங்கா நியமிக்கப்பட்டுள்ளார். தென்சென்னை வடக்கு (கிழக்கு) பகுதிக்கு, எம்.எல்.ஏ., ஆதிராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளா. தென்சென்னை வடக்கு (மேற்கு) பகுதிக்கு எம்.எல்.ஏ., சத்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்சென்னை தெற்கு (கிழக்கு) எம்.எல்.ஏ., அசோக் நியமிக்கப்பட்டுள்ளார். தென்சென்னை தெற்கு (மேற்கு) எம்.எல்.ஏ., விருகை ரவி நியமிக்கப்பட்டுள்ளார்." என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk party announcement ocr 28


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->