#BREAKING_NEWS: அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ்., இபிஎஸ்.!
admk ops and eps new announcement
இன்று மாலை 5 மணி அளவில் 2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதம் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முடிவு எட்டப்படவில்லை என்றும், கட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயல்பாடு குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 28ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இந்த செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
admk ops and eps new announcement