சமாதானம் | அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்புப்படி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-யை விடுவிக்க கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டப்பேரவை தலைவரிடம் 4 பரிந்துரை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பில் இரு கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் (எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் தான்) இருந்ததால், இன்றைய கூட்டத்தை இபிஎஸ் தரப்பு புறக்கணித்தது.

மேலும், அலுவல் கோட்டத்தில் உறுப்பினர் என்ற முறையில் ஓபிஎஸ் கலந்து கொண்டதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவர் குறித்த கடிதங்கள் பற்றி நாளை சட்டப்பேரவையில் விளக்கமளிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரவு எம்எல்ஏ., வைத்தியலிங்கம் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். 

செய்தியாளர் : அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவு நாள் அன்று, சட்டப்பேரவையில் இரண்டு அணிகளாக பிரிந்து இருப்பது நல்லதாக இருக்கிறதா?

வைத்தியலிங்கம் : கட்சிக்கு அழகாக இருக்கிறதா? இல்லையா என்பதை மக்கள், தொண்டர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

செய்தியாளர் : யார் சமரசம் பேசினால், இதற்கான தீர்வு கிடைக்கும்?

வைத்தியலிங்கம் : தலைவர் எம்ஜிஆர், அம்மாவை பற்றி, கட்சியை பற்றி சிந்தித்தால் சமாதானம் நிச்சயமாக உருவாகும். தன் சுயநலத்தை சிந்திப்பவர்கள் சமாதானத்திற்கு உட்பட மாட்டார்கள். 

செய்தியாளர் : சிந்திக்க விடாமல் யார் தடுப்பது?

வைத்தியலிங்கம் : இந்த கேள்வியை அவர்களிடம் (இபிஎஸ் தரப்பிடம்) கேளுங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA vaithiyalingam press meet


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->