#BigBreaking | சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு., சற்றுமுன் உச்சநீதிமன்றம் ஓடிய ஓபிஎஸ்.!
ADMK Head Office key case
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உத்தரவிட்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்றுகொண்டு, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை அவரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டியளித்த இருந்தார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து, ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
English Summary
ADMK Head Office key case