இன்னும் முப்பதே நாள் தாள் - அடித்து பேசிய முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


இன்னும் 30 நாட்களில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய வைகை செல்வன், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி பட்டொளி வீசி பறப்பதற்கு பேரறிஞர் அண்ணா, அவருக்கு பின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும், அதற்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா அவர்களும் என்று சொன்னால், நான்காவது எண்கள் அன்னான் எடப்பாடியார் தான்.

எங்கள் ஆருயிர் அண்ணன் பாய்ந்து வருகின்ற பந்தய குதிரை, பகைக்கஞ்சாத சிங்கம், எதிரி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவரின் காலரை பிடித்து கன்னத்தை அறைகிற ஆற்றல் மிகுந்த அண்ணன் எடப்பாடியார், இன்னும் எண்ணி 30 நாட்களில் பொதுச் செயலாளராக வர இருக்கின்றார். 

இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்று வைகை செல்வான் தெரிவித்தார். இதற்கிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு டெல்லி புறப்பட்டுள்ளார்.

மூன்று நாள் பயணமாக சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை சந்தித்து, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து புகார் அளித்துள்ளார்.

மேலும், இந்த பயணத்தில் தேர்தல் ஆணையத்தில் அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், அதிமுக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Head EPS in 30 days


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->