நடிகர் செந்தில், டிடிவி தினகரன் மீதான வழக்கு., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
actor senthil ttv case issue
அதிமுக முன்னாள் எம்.பி., குமார் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் அவதூறாக பேசி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அப்போதைய திருச்சி அதிமுக எம்.பி., குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
இதில், டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில், நடிகர் செந்தில் அவதூறாக பேசியதாக தினகரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
English Summary
actor senthil ttv case issue