மீண்டும் 51 பேர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்.. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.!!
51 dmk members dismissal for party
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளதால், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் திமுக அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் 51 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுக வேட்பாளர்களை எதிர்த்தும், தோழமைக் கட்சி வேட்பாளரை எதிர்த்தும் போட்டியிட்ட 51 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
51 dmk members dismissal for party