இந்த செடி வீட்டில் இருந்தால் கெட்ட சக்தி நெருங்கவே முடியாது.! - Seithipunal
Seithipunal


பெண்கள் மருதாணி அணிவதும்.. அதன் ஆன்மிகமும்:

இயற்கை அழகு பொருளான மருதாணி பயன்படுத்தும் வழக்கம் சங்க காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது.

மருதாணி அணிந்து கொள்வது எத்தனை நல்லதோ அதை போலவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை வீட்டின் முன் வளர்த்து வர சகல விதமான ஐஸ்வர்யமும், பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை.

பெண்களுக்கும், மருதாணி இலைக்கும் புராண காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த மருதாணிக்கு பின் ஆச்சர்யமூட்டும் அறிவியல் நன்மைகளும், ஆன்மிக முக்கியத்துவமும் உள்ளது.

மருதாணி வைக்கும் முறைகள் :

மருதாணியை பெண்கள் வியாழக்கிழமை அன்று தங்களுடைய கைகளில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் மருதாணி வைத்த கைகளை பார்க்கும் போது, பெண்களுக்கு மனதளவில் சந்தோஷம் ஏற்படும்.

அந்த சந்தோஷத்தில் அவர்கள் மன நிறைவோடு வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்தால் அவர்களுடைய வீட்டில் செல்வவளம் பெருகும். வீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்கும். நிம்மதியான குடும்ப சூழ்நிலை அமையும்.

எந்தவொரு வீட்டில் பெண்கள் மனது கஷ்டப்படாமல் சந்தோஷமாக இருக்கின்றார்களோ, அந்த வீடு சுபிட்சம் அடையும் என்பதில் சந்தேகமே கிடையாது.

எந்தவொரு வீட்டில் பெண்கள் மன கஷ்டத்தோடு வேதனையோடு இருக்கின்றார்களோ, அந்த வீட்டில் பிரச்சனைகள் தொடர்ந்து வரும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

இதோடு மட்டுமல்லாமல் பெண்களின் நகக்கண்களில் மருதாணி இருந்தால் அவர்களை கெட்ட சக்தி நெருங்கவே முடியாது. கண் திருஷ்டியும் நெருங்காது என்பதும் உண்மையான ஒரு விஷயம்.

மருதாணியில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

மருதாணியின் வரலாறு :

சீதாதேவி, இராவணனிடம் சிறைப்பட்டிருந்த பொழுது தன்னுடைய கஷ்டத்தை அருகில் இருக்கும் மருதாணி செடியிடம் சொல்லி தன்னுடைய துயரத்தை போக்கி கொள்வார். சீதாதேவியின் கஷ்டத்தை அந்த மருதாணி செடி பொறுமையாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேட்டது.

ராமர், இராவணனை போர் செய்து கொன்று விட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். சீதாதேவியின துயரத்தை கேட்டுக் கொண்டிருந்த மருதாணி செடிக்கு ஏதாவது வரம் அளிக்க வேண்டுமென்று சீதாதேவி நினைத்தார்.

சீதாதேவி மருதாணி செடிக்கு வரத்தை வழங்குமாறு ராமரிடம் பணிவோடு கேட்டுக் கொண்டார். ராமரும் மருதாணி செடியிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அந்த மருதாணி செடி என்னுடைய இலைகளை பறித்து எந்த பெண் தன்னுடைய கையில் வைத்துக் கொண்டாலும், அவர்களுடைய மனது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வீட்டில் கஷ்டமே வரக்கூடாது என்றும் அந்த மருதாணி செடி ராமரிடம் இருந்து வரத்தைப் பெற்றுக் கொண்டது.

ஆகையால் இன்றும் திருமணத்திற்கு முன்பாகவும், மற்ற நல்ல சுபகாரியங்களின் போதும் பெண்கள் மருதாணி அணிவதை ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Marudhani planet for luck


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->