நம் வாழ்வை மாற்றும் 'ஏழு' நிறங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா..?! - Seithipunal
Seithipunal


வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன. அந்த ஏழு நிறங்களும் நம் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? என்று இங்கு தெரிந்து கொள்வோம். 

நீலம் : பொதுவாகவே நீல நிறம் மன அமைதியைக் கொடுக்கும். ஜோதிடத்தில் சனி பகவானுக்கு உகந்த நிறமாக இந்த நீல நிறம் குறிப்படப்பட்டுள்ளது. 

ஊதா : நீலம் மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையான இந்த ஊதா நிறமானது, குரு பகவானுக்கு உகந்த நிறமாக கருதப்படுகிறது. ஊதா நிற ஆடை அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

ஆரஞ்சு : இது சூரிய பகவானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களின் கலவையான இந்த ஆரஞ்சு நிறமானது, நம்மை ஒரு பற்றற்ற நிலைக்கு இட்டுச் செல்லும். மேலும் இந்த நிற உடை அல்லது பொருட்களை பயன்படுத்துவதால் உங்கள் மனச்சுமை குறைந்து, தனிமை உணர்வு நீங்கி, ஒரு வித புத்துணர்ச்சியும், புது வித ஆற்றலையும் உணர முடியும். 

இண்டிகோ : இந்த நிறமானது மன அமைதியை ஏற்படுத்துவதோடு, வைட்டமின் குறைபாட்டையும் போக்குகிறது. மேலும் கண், மூக்கு, பித்தப்பை, தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை சரி செய்கிறது. 

பச்சை : இது ஜோதிடத்தில் புதனுக்குரிய வண்ணமாக கருதப்படுகிறது. பச்சை நிற ஆடைகளை அணிவதால் புதன் மற்றும் விநாயகரின் பரிபூரண அருள் கிடைக்கிறது. மேலும் ஏதோவொரு புதிய செயலை தொடங்கும் போது பச்சை நிற உடையை அணிந்து கொண்டால் , அந்த காரியம் வெற்றியடையும் என்று கருதப் படுகிறது. 

மஞ்சள் : இது தோல் நோய், கல்லீரல், நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரகம், மற்றும் வைட்டமின் ஏ குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்யும். மேலும் கண்ணில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதோடு, மனதிற்கு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. இந்த மஞ்சள் நிறம் மகா விஷ்ணுவிற்கு உகந்ததாக கருதப்படுகிறது. 

சிவப்பு : இந்த நிறம் செவ்வாய் கிரகத்தின் பரிபூரண அருளைக் கொடுக்க கூடிய நிறமாக உள்ளது. சிவப்பு நிற ஆடைகளை அணிவதால் உற்சாகம் பிறக்கும். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்தும். மேலும் ரத்த சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Effects Of Seven Colours Which Placed in Rainbow


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->