சுவைமிகுந்த ரவை தேங்காய் உருண்டை.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவைமிகுந்த ரவை தேங்காய் உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப்

ரவை - 1/2 கப்

சர்க்கரை - 3/4 கப் 

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

திராட்சை - 5

முந்திரி - 5

செய்முறை:

முதலில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்பு மீதமுள்ள நெய்யில் தேங்காய் துருவலை வறுத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்பு பாகு பதம் வந்ததும், வறுத்த ரவை மற்றும் தேங்காய் துருவலை பாகில் கொட்டி, ஏலக்காய்தூள், முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். 

பின்பு சற்று சூடாக இருக்கும் போதே உருண்டை பிடித்தால் சுவையான ரவை தேங்காய் உருண்டை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Rava coconut laddoo


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->