உங்கள் சருமம் பொலிவு மேம்படுத்த வேண்டுமா.. அப்போ இதனை பயன்படுத்துங்கள்..!
Sembaruthi Skin care
வெயில் காலத்தில் சருமத்திற்கு கூடுதல் கவனம் அவசியமாகிறது. அதற்காக பூக்களை பயன்படுத்தலாம். செம்பருத்தியை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்.
தேவையானவை:
செம்பருத்திப்பூ தூள் - 2 தேக்கரண்டி
ரோஜா பொடி - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
எப்படி பயன்படுத்துவது:
செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கண்ணாடி பாட்டிலில் மூடி வைத்து கொள்ளவும்.
இதனை தினமும் பயன்படுத்தி வர வறண்ட சருமம் சரியாகும். இந்த மாய்ஸ்சுர் சருமத்தை ஈரபத்துடன் வைத்திருக்க உதவும்.