உடலை புத்துணர்வாக்கும் புதினா, சூப்பரான இட்லி பொடி செய்து கொடுங்கள்..! - Seithipunal
Seithipunal


புதினாவை வைத்து இதுவரை நாம் இட்லி பொடி செய்திருக்க மாட்டோம். இனி புதினாவிலும் சுவையான இட்லி பொடி செய்யலாம். எப்படி பொடி செய்வது என தெரிந்து கொள்ளுவோம்.

தேவையானவை :

தனியா - 2 tbsp

கடலை பருப்பு - 2 tbsp

உளுத்தம் பருப்பு - 2 tbsp

எண்ணெய் - 1 tsp

மிளகு - 1/2 tsp

சீரகம் - 1/2 tsp

வெந்தயம் - 1/4 tsp

காய்ந்த மிளகாய் - 10

புதினா - கைப்பிடி அளவு

பூண்டு - 5 பல்

செய்முறை :

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி முதலில் தனியாவை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதே கடாயில் கடலைப்பருப்பு , உளுத்தம் பருப்பு  வறுத்து கொள்ளுங்கள். அதன்பின், காய்ந்த மிளகாயை வறுத்து கொள்ளுங்கள்.மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். அதனுடன்  புதினாவை வதக்கி கொள்ளுங்கள். பூண்டை வதக்கி கொள்ளுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்து பருப்பு , காய்ந்த மிளகாய் மற்றும் மசாலா வகைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இறுதியாக புதினா பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthina Podi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->