குளிர்காலத்திலும் சருமம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? - இதை மட்டும் செய்து பாருங்க.! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப சருமங்களில் மாற்றங்கள் ஏற்படும். இதனை தடுக்க பல்வேறு இயற்கை முறைகளை செய்வார்கள். அந்த வகையில் கற்றாழை ஜெல்லுடன் சில பொருட்களை கலந்து தடவுவது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய்

கற்றாழை மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து இரவு தூங்கும் முன்பு முகத்தில் மசாஜ் செய்து, காலையில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். பாதாம் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை பளபளக்க உதவுகிறது.

* கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்துப் பயன்படுத்துவதால் வறண்ட மற்றும் மந்தமான சரும பிரச்சனை குறைகிறது. 

* கற்றாழை மற்றும் கிளிசரின்

கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல் கலவை வறண்ட சரும பிரச்சனையை குறைக்கிறது. இது சருமத்தின் பொலிவைக் குறைத்து, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். 

* கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள்

கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் கலந்து தடவினால் முகமும் மேம்படும். சருமத்தை தொற்று நோயிலிருந்து பாதுகாத்து பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

* கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர்

கற்றாழை ஜெல் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து தடவினால், சருமம் ஈரப்பதமாக இருக்கும். குளித்த பின், கற்றாழை ஜெல்லில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

face pack tips


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->