முகத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் வெள்ளரிக்காய் ஒரு நல்ல தீர்வு...!
Cucumber is a good solution for all kinds of facial problems
உடல் சிவப்பாக மாற:
- உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.
கரும் மச்சங்கள் மறைய:
- வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும், முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

கண் வீக்கத்தினைப் போக்க:
- காலையிலும் இரவிலும் வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்துக் கொண்டு 10 நிமிடங்கள் ஓய்வெடுத்தால், கண்களுக்கடியில் வீக்கம் வடியும்.
முகம் பிரகாசமாக:
- வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.
முகம் பளிச்சென்று காட்சியளிக்க:
- வெள்ளரிக்காயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.பின் அதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இறுதியில் முகத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும்.இந்த மாஸ்க்கை தினமும் ஒரு முறை பயன்படுத்த, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று அழகாக காட்சியளிக்கும்.
கருவளையம் நீங்க:
- வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும்.இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கருமை நீங்க:
- வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும்.வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது புத்துணர்ச்சியோடு இருக்கும்.
English Summary
Cucumber is a good solution for all kinds of facial problems