சிறுவனை ஏரியில் தள்ளி கொலை செய்த வாலிபர் - நொடியில் எடுத்த விபரீத முடிவு.!
youth sucide drowned lake after kill boy in madhya pradesh
சிறுவனை ஏரியில் தள்ளி கொலை செய்த வாலிபர் - நொடியில் எடுத்த விபரீத முடிவு.!
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம் ஜஹாங்கிராபாத் சிக்லோட் பகுதியைச் சேர்ந்தவர் கேசர் தாஜ். இவர் நேற்று மாலை தனது ஏழு 7 வயது மருமகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லாமல், கட்லாபுராவில் புர்ஜ் என்ற இடத்தில் உள்ள ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு கேசர் அந்த சிறுவனை ஏரிக்குள் தள்ளி விட்டுள்ளார். இதனால் அந்தச் சிறுவன் தண்ணீருக்குள் உயிருக்கு போராடிய நிலையில், தத்தளித்துள்ளார். அப்போது, அந்த வழியே சென்ற ஒருவர், எதற்காக சிறுவனை ஏரியில் தள்ளி விட்டீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்காமல் கேசரும் ஏரியில் குதித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் சம்பவம் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். அதன் படி விரைந்து வந்த போலீஸார், ஏரியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராடியும் சிறுவன் மற்றும் கேசர் தாஜ் உள்ளிட்டோரின் உயிரற்ற உடல்களையே அவர்களால் மீட்க முடிந்தது.
இதையடுத்து, போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
youth sucide drowned lake after kill boy in madhya pradesh