காட்டு யானையை விரட்ட முயன்ற போது பரிதாபம்.! யானை மிதித்து வாலிபர் பலி.! - Seithipunal
Seithipunal


அசாமில் காட்டு யானை மிதித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தின் பெஹாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிஹ்மாரி பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்துள்ளது. இதனால் அந்த காட்டு யானையை விரட்ட கணேஷ் ஹெம்ரோன் என்ற வாலிபர் முயன்றுள்ளார். அப்பொழுது காட்டு யானை மிதித்து கணேஷ் ஹெம்ரோன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்கள், காட்டு யானைகளிடமிருந்து தங்களை காப்பாற்ற வனத்துறையினர் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed in elephant attack in Assam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->