அரசு பேருந்தில் ரகளை செய்த இளம்பெண் - நடத்துனரை வெளுத்து வாங்கிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஹயாத் நகரில் அரசுப் பேருந்து ஒன்று இரவு வேளையில் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏறிய இளம் பெண் ஒருவர், 10 ரூபாய் பயணச்சீட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்துள்ளார்.

அதனை நடத்துநரும் மறுக்காமல் அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, 10 ரூபாய் பயணச்சீட்டும், மீதம் 490 ரூபாயையும் கொடுத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் போதையில் இருந்ததால், நடத்துநர் அவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.

சுய நினைவு இல்லாமல் இருந்த அந்த இளம் பெண் நடத்துனரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தனது கால்களால் எட்டி உதைத்தும், அவர் மீது எச்சிலை துப்பியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதை பேருந்தில் பயணித்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman attack conductor in telangana govt bus


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->