அரசு பேருந்தில் ரகளை செய்த இளம்பெண் - நடத்துனரை வெளுத்து வாங்கிய சம்பவம்.!
woman attack conductor in telangana govt bus
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ஹயாத் நகரில் அரசுப் பேருந்து ஒன்று இரவு வேளையில் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் ஏறிய இளம் பெண் ஒருவர், 10 ரூபாய் பயணச்சீட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
அதனை நடத்துநரும் மறுக்காமல் அந்த பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, 10 ரூபாய் பயணச்சீட்டும், மீதம் 490 ரூபாயையும் கொடுத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் போதையில் இருந்ததால், நடத்துநர் அவரை இருக்கையில் அமருமாறு கூறியுள்ளார்.
சுய நினைவு இல்லாமல் இருந்த அந்த இளம் பெண் நடத்துனரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தனது கால்களால் எட்டி உதைத்தும், அவர் மீது எச்சிலை துப்பியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதை பேருந்தில் பயணித்த சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman attack conductor in telangana govt bus