சகோதரருக்கு சிறுநீரகத்தை வழங்கும் உடன்பிறப்பு - சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


சகோதரருக்கு சிறுநீரகத்தை வழங்கும் உடன்பிறப்பு - சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி.!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் தங்கர். இவருடைய சகோதரி ஷீலாபாய். இதில், ஓம்பிரகாஷ் தங்கர் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் தான் ஓம்பிரகாஷ் தங்கரின் உயிரை காப்பாற்ற முடியும் என்றுத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஷீலாபாய் தம்பிக்கு தனது சிறுநீரகத்தை ரக்‌ஷா பந்தன் பரிசாக வழங்குவதாக தெரிவித்ததுடன், அவரது கையில் ராக்கி கயிற்றினை கட்டி பாசத்தை வெளிக்காட்டினார்.

சகோதரி ஷீலாபாயின் இந்த அறிவிப்பை தொடர்ந்து தம்பி ஓம்பிரகாஷ் தங்கருக்கு செப்டம்பர் 3ம் தேதி மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் படி ஓம்பிரகாஷ் தங்கரும் அவரது சகோதரி ஷீலாபாயும் குஜராத் மாநிலத்தில் அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர்.

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் அந்நாளில் தனது சகோதரனுக்கு உடலின் ஓர் அங்கத்தை கொடுத்து உயிர் காக்க உதவ முன் வந்துள்ள அந்த பெண்ணின் சகோதர பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman announced provide kidny to brother in chateeshgarh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->