பிறப்புறுப்பில் இரும்பு திணித்து பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம்.. அரங்கேறிய கொடூரம்..!
Uttar Pradesh girl Sexual Harassment Hardly 6 Jan 2021
உத்திர பிரதேசம் மாநிலத்தில் உகாய்தி கிராமத்தை சார்ந்த இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் கோவிலில் இருந்து திரும்பி வீட்டிற்கு நடந்து வந்துகொண்டு இருக்கையில், காரில் வந்த 3 பேர் பெண்ணை கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு பெண்ணை கடத்தி சென்று, மூவரும் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களின் பிடியில் இருந்து தப்பித்து செல்ல பெண் முயற்சித்தால், பெண்ணை காமுக கூட்டம் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால் பெண்ணின் இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்துள்ளது.
இத்தனை கொடூரத்தையும் அரங்கேற்றிய காமுகன்கள், பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை செலுத்தி கொடுமை செய்துள்ளனர். இதனால் பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் வெளியேறி பெண்மணி சுயநினைவை இழக்கவே, அவரை அங்குள்ள புதரில் தூக்கி எறிந்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
கோவிலுக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால், பெண்ணின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர் அதிகாலையில் பெண்மணியை மீட்ட நிலையில், அவர் சில மணிநேரத்திற்கு உள்ளாகவே பலியாகியுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக 18 மணிநேரம் கழித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்கு பெண்ணின் உடலை அனுப்பியுள்ளனர். அதன்போது, பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சத்ய நாராயணா, வேதராம், ஜெயபால் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Uttar Pradesh girl Sexual Harassment Hardly 6 Jan 2021