பாலியல் பலாத்கார முயற்சி தோல்வியுற்றதால் மாணவியை தீ வைத்து கொளுத்திய கொடூரம்... 3 பேருக்கு வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் அதிகளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். மேலும், கூட்டுப்பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றங்களும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜகான்பூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கல்லூரி மாணவி நிர்வாண நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். இவரை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மாணவியை மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவி அனுமதி செய்யப்படவே, விவசாய நிலத்தில் தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாகவும், அது தோல்வி அடைந்ததால் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாகவும் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுமியின் கல்லூரி நண்பர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள மஹோபா மாவட்டத்தில் 16 வயது சிறுமி வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh College girl Sexual Abuse Attempt Failure Murder Attempt Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->