திருமண நிகழ்ச்சியில் கொடூரம்... ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல்சிதறி  பலி.! - Seithipunal
Seithipunal



உத்தரப் பிரதேசம் மாநிலம் : திருமண நிகழ்ச்சியில் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறிய சமபவத்தில் ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல்சிதறி  பலியாகிய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

விக்ரம்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில், ஒரு சிறுமி, 3 பெண்கள் என நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 

மேலும் இந்த விபத்தில் 3 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்து கசிவு ஏற்பட்டதால் சிலிண்டர் வெடித்தது தெரியவந்துள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது சிலிண்டர் வெடித்து 4 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UP Marriage function accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->