உ.பி : இடி மற்றும் மின்னல் தாக்கியதில் ஒரேநாளில் 14 உயிரிழப்பு.!
UP 14 dead in one day due to thunder and lightning
உத்தரபிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கி நேற்று ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் நேற்று கடுமையான இடியுடன் மின்னல் தாக்கியது.
இடி மற்றும் மின்னல் தாக்கியதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.
பதேபூர், பண்டா, பல்ராம்பூர், சந்துலி, ரேபரெலி, அமேதி, கவுஷம்பி, சுல்தான்பூர், சித்திரகோட் ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இடி மற்றும் மின்னல் தாக்கியதில் ஒரேநாளில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
UP 14 dead in one day due to thunder and lightning