தடையில்லா மின்சாரம் வழங்க கோரி மனு அளித்த எம்.எல்.ஏ.நேரு..! - Seithipunal
Seithipunal


புதுவை மின்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் எம்.எல்.ஏ.நேரு மனு ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:- 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகர பகுதியில் ஏற்படும் மின்தடை பற்றி நான் பலமுறை தங்கள் துறைக்கு கடிதம் மூலமும், நேரிலும் பலமுறை தெரிவித்தும் இதற்கு தீர்வு இல்லாத நிலை நீடித்து வருகிறது. 

ஆனால் மின்சார கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. நகரின் மத்தியில் அமைந்திருக்கும் உருளையன்பேட்டை தொகுதியில் போதுமான மின்கட்டமைப்பை ஏற்படுத்தாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. 

குறிப்பாக ஒரு மணி நேரம், மழை பெய்தால் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் கொசு கடிக்கு ஆளாகி அவதிக்குள்ளாகிறார்கள். அதுவும் இரவு நேரத்தில் மின்தடை அதிகளவில் ஏற்படுவதால் மின்விசிறி பயன்படுத்த முடியாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள். 

இதனால் கொசு கடிக்கு ஆளாகி டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது தங்கள் துறையில் வேலை நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிகிறது. இது நீடித்தால் பொதுமக்கள் கொந்தளிக்கும் நிலை ஏற்படும். 

ஆகையால், மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு நுகர்வோர்க்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும். அப்படியில்லை யென்றால் பாதிப்புக்கு ள்ளாகி வரும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

uninterrupted electricity supply MLA nehru pettion


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->