தண்டவாளத்தில் கிடந்த சடலம்: மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்!
tracks lying on Dead body Metro train service stopped
கொல்கத்தா, டோலிகஞ்ச் மற்றும் ரவீந்திர சரோபார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ஆன தண்டவாளத்தில் இன்று மனித உடல் ஒன்று கிடந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோலிகஞ்ச் மற்றும் ரவீந்திர சரோபார் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 9 மணி அளவில் மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது தண்டவாளத்தில் இருந்த மனித உடலை பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். பின்னர் இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து டோலிகஞ்ச் மற்றும் கபி சுபாஸ் நிலையத்திற்கு இடையேயான மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாவது, இன்று டோலிகஞ்ச் மற்றும் ரவீந்திர சரோபார் மெட்ரோ ரயில் நிலைய தண்டவாளத்தில் மனித உடல் ஒன்று கிடப்பதை பார்த்த ரயிலோட்டர் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு அதிகரிக்கும் தகவல் அளித்தார்.
இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் தண்டவாளத்தில் இருந்த உடலை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டதும் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
tracks lying on Dead body Metro train service stopped