இன்று மோதிலால் நேரு அவர்களின் இவரின் நினைவு தினம்.!
Today mothilal nehru memorial day
நாட்டின் சுதந்திரத்திற்காக தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார்.
ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச்சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர்.
1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இரண்டு முறை காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தார். எளிமையால் கவரப்பட்டு தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்த மோதிலால் நேரு 1931ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி மறைந்தார்.
English Summary
Today mothilal nehru memorial day