திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி பக்தர்கள் கவனத்திற்கு...!
Tirupati Devastanam Announce Conference Dharisanam
திருப்பதியில் வரும் மார்ச் 9, 24 , முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம், ஸ்மார்த்த ஏகாதேசி, வைஷ்ணவ மாத்வ ஏகாதேசி, லட்சுமி ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகள் காணொளி வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள். திருவிழா காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இணையவழியில் சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், மார்ச் மாதம் நடைபெறும் ஆர்ஜித சேவை பதிவு சீட்டுகள் காணொளி காட்சி மூலமாக திருப்பதி திருமலை தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமண உற்சவ நிகழ்வுக்கு முன்பதிவு செய்த பக்தர்களுக்கு 90 நாட்களுக்கு தேவஸ்தானம் இலவச தரிசனம் வழங்கி வரும் நிலையில், வரும் மார்ச் 9 ஆம் தேதி, 24 ஆம் தேதி, முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம், ஸ்மார்த்த ஏகாதேசி, வைஷ்ணவ மாத்வ ஏகாதேசி, லட்சுமி ஜெயந்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இவையும் காணொளி வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tirupati Devastanam Announce Conference Dharisanam