உத்தரகாண்ட்டில் சோகம் - பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட்டில் சோகம் - பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் நகரில் இருந்து கலாதுங்கி நோக்கி 32 பயணிகளுடன் பேருந்து ஒன்று நேற்றிரவு வந்து கொண்டிருந்தது. அதன் படி இந்தப் பேருந்து கலாதுங்கி சாலையில் கத்காட் பகுதியருகே வந்து கொண்டிருந்த போது,  திடீரென சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சிக்கி கொண்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி போலீசார் மாநில பேரிடர் பொறுப்பு படை, தீயணைப்பு துறை மற்றும் உள்ளிட்டோருடன் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரைக்கும் 28 பேர் மீட்கப்பட்டனர். அதில் 18 பேர் காயமடைந்து உள்ளனர். 

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்றிரண்டு பேர் இன்னும் சிக்கியிருக்க கூடும் என்பதால் தொடர்ந்து  அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples died eighteen peoples injured for bus accident in uttarkhant


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->