பார்ட்டிக்குச் சென்ற வாலிபர் - சக நண்பர்கள் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நொய்டாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த யாஷ் மிட்டல் என்பவர் கடந்த திங்கட்கிழமை விடுதியில் இருந்து வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் விடுதிக்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில், யாஷை கடத்தி வைத்திருப்பதாகவும், விடுவிக்க வேண்டும் என்றால் 6 கோடி ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் அவரது தந்தை தீபக் மிட்டலுக்கு மர்ம நபர்கள் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். 

இதுகுறித்து தீபக் மிட்டல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன யாஷ் மிட்டலை தீவிரமாகத் தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் பல்கலைக்கழக சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, திங்கட்கிழமையன்று யாஷ் மிட்டல் செல்போனில் பேசியபடி பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது. 

உடனே போலீசார் யாஷ் தொடர்பு கொண்ட எண்ணை சோதனை செய்ததில், யாஷ் செல்போனில் பேசியது அவரது நண்பர் ரச்சித் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் கஜ்ராவ்லா பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பார்ட்டி கொண்டாடியுள்ளனர். 

அப்போது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டதனால், யாஷ் மிட்டலை, நண்பர்கள் ரிச்சித், சிவம், சுசாந்த், ஷுபம் ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்ததுடன், உடலை அங்கேயே புதைத்து விட்டு வந்தது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து போலீசார் புதைத்த இடத்தை அடையாளம் கண்டு உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை வழக்கில் ரச்சித், சிவம், சுசாந்த் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். பார்ட்டிக்கு அழைத்துச் சென்று நண்பனை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for kill friend in noida


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->