ஆத்திரத்தில் நடந்த சம்பவம்... கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் குடும்ப தகராறில், ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி நாகராஜ். இவருடைய மனைவி நந்தினி (34). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து இவர்களிடையே நேற்று முன்தின இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த நாகராஜ், மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக நந்தினி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து நாகராஜ் கத்தியுடன் காவல் நிலையத்திற்கு சென்று, குடும்ப தகராறில் என் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நாகராஜன் கைது செய்து தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The husband who murder his wife in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->