மனைவியை அடித்து கொலை செய்த கணவர்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


சிக்கமகளூரு மாவட்டத்தில் குடும்பத்தகராறில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் ஜாலடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவரது மனைவி இந்திரம்மா. இந்நிலையில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து நேற்று முன்தின காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு இந்திரம்மா பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சடைந்த நிலையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இந்திரம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் இந்த சமூகம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்திரம்மாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டபோது இந்திரம்மாவை கணவர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கணவர் கோவிந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband murder his wife in chikkamakaluru Karnataka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->