#Breaking: தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.!!
Tamilnadu Corona Virus Fund Central Govt Rs 533 Crore 9 May 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸை ஒழிக்க மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், மாநிலங்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் நிதியையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதியமைச்சராக தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.533.2 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.
25 மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு மட்டும் ரூ.533 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தமிழக அரசு ரூ.59 கோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Corona Virus Fund Central Govt Rs 533 Crore 9 May 2021