தாய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க விடவில்லை.. விடுதியில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு.. கர்நாடகாவில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


அம்மாவி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க அனுமதிக்காததால் விடுதியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஹோசகோட்டைச் சேர்ந்தவர் பூர்வாஜ் (14). இவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.அவரின் தாய்க்கு ஜூன் 11 ம் தேதி பிறந்தநாள் என தெரிகிறது. தாய்க்கு வாழ்த்து தெரிவிக்க விடுதி வார்டனிடம் மாணவன் செல்போன் கேட்டுள்ளார். ஆனால்,அவர் தரமறுத்துள்ளார்.

அதே போல சிறுவனின் குடும்பத்தினரும் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் செல்போனை தரவில்லை இதால் மனமுடைந்த சிறுவன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை மற்ற மாணவர்கள் அவரின் அறையில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்  அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தற்கொலைக்கு முன் சிறுவன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student Committed Suicide In Hostel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->