அசாமில் கொடூரம் - மாடு திருடியதாக நபர் கொலை - 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


அசாமில் கொடூரம் - மாடு திருடியதாக நபர் கொலை - 6 பேர் கைது.!

அசாம் மாநிலத்தில் உள்ள ஹோஜாய் மாவட்டம் பமுங்கான் பகுதியில் நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பல் ஒருவரை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த நபர் ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்திய போது அந்த நபர் ஹோஜாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிஃப்சுர் ரஹ்மான் என்பது தெரிய வந்தது.

மேலும், அவர் ஒரு வீட்டில் இரண்டு எருமை மாடுகளைத் திருட முயன்றதாக தெரிவித்து ஒரு கும்பல் அவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது. இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஹிஃப்சுர் ரஹ்மான் குடும்பத்தினர் சம்பவம் தொடர்பாக போலீஸில் நேற்று மாலை புகார் அளித்தனர்.

அதன் படி போலீஸார் கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தியதில், ரஹ்மானை அடித்துக் கொலை செய்ததாக சஞ்சய் தாஸ், நிகில் தாஸ், துலேந்திர தாஸ், உத்தம் சக்ரவர்த்தி, ஜெயந்தா சக்ரவர்த்தி மற்றும் சந்து மஜூம்தார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். எருமை மாடுகளைத் திருட முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six peoples arrested for kill man in assam


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->