6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன்.. சீர்காழியில் அதிர்ச்சி.!!
Seerkazhi 6 year child sexual torture by 17 year youngster police arrest
சீர்காழியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது காமுக சிறுவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதே பகுதியில் 17 வயதுடைய சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில், சம்பவத்தன்று காமுகன் சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். பின்னர் அக்கம் பக்கத்தினருக்கு பயந்து சிறுமியை அப்படியே விட்டுவிட்டு வந்துள்ளான்.
சிறுமி தனது இல்லத்திற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Seerkazhi 6 year child sexual torture by 17 year youngster police arrest