நான்கு பேரின் உயிரை பறித்த பள்ளி வேன் - கேரளாவில் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


நான்கு பேரின் உயிரை பறித்த பள்ளி வேன் - கேரளாவில் அதிர்ச்சி.! 

கேரளா மாநிலத்தில் உள்ள மொக்ரால் பகுதியை சேர்ந்தவர்கள் உமாலிமா, பாத்திமா மோகர் , நபீசா. சகோதரிகளான இவர்கள் மூவரும் தங்களது சித்தியுடன் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று மாணவர்களை இறக்கி விட்டு காலியாக வந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பள்ளிப் பேருந்தும் – ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இடுபாடிகளில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் மற்றும் மூன்று இளம்பெண்கள் உள்பட நான்கு பெரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school van and auto accident in kerala


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->